states

img

திருமணத்தை வேடிக்கை பார்த்த 13 பேர் கிணற்றில் விழுந்தது பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணத்தை வேடிக்கை பார்க்க சென்ற 13 பேர் கிணற்றில் விழுந்து பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில்  திருமணத்திற்கான கொண்டாட்டத்தின்போது கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேல்தளத்தில் பெண்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் மேல்தளம்இடிந்து விழுந்தது. மேல்தளத்தில் இருந்த பெண்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் கிணற்றில் விழுந்த 13 பெண்கள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.